உலகம்

ஜேம்ஸ் பாண்ட் தெரியுமா? ராகுலிடம் கேட்ட அருண் ஜேட்லி.. ஏன் தெரியுமா?

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது.

ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக மீதும், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மீதும் ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்கு உடனடியாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார். நாடாளுமன்றத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு அருண் ஜேட்லி பதில் அளிக்கும் விதத்தில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

லோக் சபாவில் ராகுலின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமான நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். அதில், ராகுல் காந்தி அவையில் கூறிய கருத்துக்கள் எதிலும் உண்மை கிடையாது. அவர் வெளியிடுவதாக கூறிய ஆடியோ கூட திரிக்கப்பட்டது. பொய்யானது. ராகுல் காந்தி தொடக்கத்தில் இருந்தே ரபேலை வைத்து மக்களை குழப்பி வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version