தமிழ்நாடு

ஜெ. சிகிச்சை சிசிடிவி காட்சிகளை தாங்க.. அப்போலோவிற்கு விசாரணை ஆணையம் கிடுக்கிப்பிடி!

Published

on

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version