Connect with us

இந்தியா

ஒரு ஏழைத் தாயை இனிமேலும் ஏமாற்றாதீர்கள்: அமித் ஷாவை சந்தித்த அற்புதம்மாள்!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்த விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதனையடுத்து பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் இந்த விடுதலை தொடர்பான முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 10 மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் இதுவரை முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விடுதலை செய்ய கோரிக்கை மனு அளித்துள்ளார் விசிக எம்பி தொல்.திருமாவளவன். இவருடன் சக எம்பியான ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் சென்றனர்.

அற்புதம்மாளும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனது மகனை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து விவரித்தார். அப்போது, அமித் ஷா எங்களை நன்றாக வரவேற்று பேசினார். எங்கள் கோரிக்கையை மனுவாக அளித்துள்ளோம். ஆலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாகச் சொன்னார்.

பேரறிவாளனுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன் கூறியது குறித்தும் மனுவில் தெரிவித்திருக்கிறோம். வேண்டுமென்றால் அவரிடம் விசாரிக்கலாம். பதில் வரும் என்று காத்திருக்கிறோம். இந்தத் தகவல் ஆளுநருக்கு செல்லும் என்று கூறுகிறார்கள். ஆளுநர் ஒரு கையொப்பமிட்டால் அனைவரும் விடுதலையாகிவிட வாய்ப்புள்ளது. அதனை எதிர்பார்த்துதான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். ஒரு ஏழைத் தாயை இனிமேலும் ஏமாற்றாதீர்கள் என கண்ணீர் மல்க கூறினார் அற்புதம்மாள்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்