தமிழ்நாடு
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் இலவசம்: அர்ஜூனா மூர்த்தி அதிரடி!
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் துவங்கி உள்ள அர்ஜுனா மூர்த்தி மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்த நேரத்தில் அவருடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் ரஜினி அரசியல் முடிவை கைவிட்ட பின் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறிய அர்ஜுனா மூர்த்தி இன்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த கட்சிக்கு ரஜினிகாந்த் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என அர்ஜுன மூர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என்றும் நான்கு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளை அரசியல் கட்சி தொடங்கி அன்றே அர்ஜூனா மூர்த்தி அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது