தமிழ்நாடு

ரஜினிகாந்த் அரசியலில் தான் உள்ளார்: அர்ஜுன் சம்பத்

Published

on

ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் உள்ளார் தான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்த் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், “தமிழகத்தில் ஆன்மீக அரசியல் எழுச்சி பெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்த்தலில், 234 தொகுதிகளிலும் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும். அதற்கான பணிகளை இந்து மக்கள் கட்சி செய்து வருகிறது.

ரஜினிகாந்த் அரசியலில் தான் இருக்கிறார். அவர் வழி தனி வழி. ரஜினிகாந்த் பாஜவில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் கட்சி தொடங்கினால் அனைத்து கட்சி கூடாரங்களும் காலியாகி விடும். அவர் தான் ஜெயிப்பார். அவருக்கென தனி செல்வாக்கு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியைத் தடை செய்ய வேண்டும்.” என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version