பிற விளையாட்டுகள்
குரோஷியாவின் அரையிறுதி கனவு தகர்ப்பு.. அடுத்தடுத்து கோல்போட்டு அசத்திய அர்ஜெண்டினா!
உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய இரண்டு அணிகள் மோதின.
அதன்படியே நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆவேசமாக கோல் அடிக்க முயற்சி செய்தனர் என்பதும் குரோஷியா ஆரம்பம் முதலே தடுப்பாட்டம் விளையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நிலையில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று குரோஷிய அணி அதிக நிமிடங்களை வேஸ்ட் செய்தது.
முதல் பாதிக்கு பின்னர் அர்ஜென்டினா தடுப்பாட்டம் விளையாட குரோஷியா ஆவேசமாக கோல் அடிக்க முயற்சித்தது. இருப்பினும் 69 ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க குரோஷிய அணி வீரர்கள் தளர்ந்து போனார் என்பது தான் உண்மை. இறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து முதல் முறையாக இறுதிக்குள் நுழையலாம் என்ற குரோஷியாவின் கனவு தகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.