சினிமா

செல்பி எடுப்பது சிலையா? அனுஷ்காவா?

Published

on

பாலிவுட்டின் முன்னணி நாயகி அனுஷ்கா ஷர்மாவுக்கு மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

உலகின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியம் நியூயார்க், லண்டன், டில்லி, சிங்கப்பூர் என பல இடங்களில் தனது கிளைகளை நிறுவியுள்ளது.

விளையாட்டு, சினிமா, அரசியல் மற்றும் கலைத் துறை பிரபலங்களுக்கு ஆளுயுர மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் வைத்து வருகிறது. மேடம் டுசாட்ஸில் எப்போது நமக்கு சிலை வைப்பார்கள் என காத்திருக்கும் பிரபலங்கள் பட்டியலும் உண்டு.

இந்நிலையில், கையில் மொபைல் வைத்து செல்ஃபி எடுப்பது போன்ற அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயுர சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சிலை திறப்பு, விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷர்மா, சிலை அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். எது சிலை எது அசல் என்று தெரியாத வண்ணம் அந்த சிலை அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதற்கு முன்னர், அமிதாப் பச்சன், ஷாரூக்கானுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் கணவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராத் கோலிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version