டிவி

அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி – அடுத்த ட்விஸ்டு!

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஷிவானி நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸின் நடப்பு சீசன் போட்டியாளர்களான நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா மற்றும் ரேகா ஆகியோர் மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நான்கு பேரில் ரேகா, முதல் சில வாரங்களிலேயே வாரமே எவிக்ட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஒரே வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். அர்ச்சனா, மிக சமீபமாகவே பிக் பாஸிலிருந்து மக்கள் வாக்குகளால் வெளியே அனுப்பப்பட்டார்.

தற்போது பிக் பாஸ் 4 வது சீசனின் கடைசி வாரம் நடந்து வருகிறது. இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படும். டைட்டிலை வெல்வதில் ஆரிக்கும் பாலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல கேபி, ரம்யா, ரியோ மற்றும் சோம் ஆகியோருக்கும் டைட்டிலை வெல்வதற்கு சம வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு மலரும் நினைவுகளை வரவழைத்துள்ளது.

Trending

Exit mobile version