தமிழ்நாடு

பாஜக அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

Published

on

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்த இவருக்கு பாஜக துணைத் தலைவர் பதவியும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அண்ணாமலை அவர்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் திடீரென கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அவர் தன்னைத்தானே காத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் மூலமாக இந்த பாஜக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version