தமிழ்நாடு

தமிழர்களுக்கு இது தேன் போன்ற வாக்குறுதி: ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

Published

on

தமிழர்களுக்கு இது தேன் போன்ற வாக்குறுதி என ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று ஏஆர் ரஹ்மான் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருந்ததாவது: சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் டுவிட்டுக்கு உடனே பதிலளித்த ஸ்டாலின், ‘இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்’ என்று ஒரு வாக்குறுதியை அளித்தார்.

முக ஸ்டாலினின் இந்த வாக்குறுதி குறித்து சற்றுமுன் டுவிட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version