தமிழ்நாடு

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

Published

on

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் இதன் முக்கிய திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ஏப்ரல் 16-ஆம் தேதி கள்ளழகர் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் காரணமாக மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் மதுரை மாவட்டத்திலுள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திர்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version