இந்தியா
வாக்களர் அட்டையுடன் ஆதார் என்ணை இணக்க முடிவு – அமைச்சரவை ஒப்புதல்
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.
இறுதியாக அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அதற்கு மேல் காலக்கெடு வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது வாக்காளர் அட்டையுன் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளது. இதற்கான முடிவை மத்திய அரசு சமீபத்தில் எடுத்தது. மேலும், இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, விரைவில் இதற்கும் காலக்கெடு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் ஓட்டுனர் உரிமமும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.