வேலைவாய்ப்பு

செக்யூரிட்டி மேலாளர் வேலை கனரா வங்கியில் விண்ணப்பியுங்கள்!

Published

on

 

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 31 செக்யூரிட்டி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 31. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 4 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 ஆண்டு அதிகாரி பணிக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.11.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாதம் சம்பளம்: ரூ. 31,705 – 45,950 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் தகுதியின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சலாம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager Canara Bank Recruitment Cell, HR Wing Head Office, 12 JC Road, Bangalur 560002.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 3.12.2018

seithichurul

Trending

Exit mobile version