தொழில்நுட்பம்

ஏலத்துக்கு வந்த ‘ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் வேலை விண்ணப்பக் கடிதம்..!

Published

on

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோயின் பாதிப்பின் காரணமாக காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 1973-ம் ஆண்டு தனக்கு வேலை வேண்டி கைப்பட எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் தற்போது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் காப்ஸ் எழுதிய வேறொரு கடிதம் ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தார். தற்போது ஏலத்துக்கு வந்துள்ள கடிதம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த ஏலம் பிபரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு வந்துள்ள கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் தனக்கு கனிணி, கால்குலேட்டர் உபயோகப்படுத்தத் தெரியும் என்றும் டிசைன் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version