தொழில்நுட்பம்
கொரோனா நோயாளியைக் கண்டறிய புதிய செயலி.. கூகுள் – ஆப்பிள் கூட்டணி!
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டவர்களின் நடமாட்டம் மற்றும் வழித்தடங்களை எளிதில் கண்டறியும் செயலி ஒன்றைக் கூகுள் -ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்த செயலியை மொபைலில் நிறுவினால், கொரோனா பாதித்தவர்கள் அருகில் இருக்கும் போது விலகி இருக்க அறிவுறுத்துமாம்.
செயலியை முழுமையாகச் சோதித்த பிறகு உலக சுகாதார அமைப்புகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு மே மாதம் முதல் இந்த செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஐபோன், ஆண்டிராய்ட் என இரண்டு போன்களிலும் இந்த செயலி கிடைக்கும். இந்த செயலி குறித்த முக்கிய அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
To help public health officials slow the spread of #COVID19, Google & @Apple are working on a contact tracing approach designed with strong controls and protections for user privacy. @tim_cook and I are committed to working together on these efforts.https://t.co/T0j88YBcFu
— Sundar Pichai (@sundarpichai) April 10, 2020