தமிழ்நாடு

அப்பாவு எம்.எல்.ஏவுக்கு முக ஸ்டாலின் கொடுக்க போகும் சூப்பர் பதவி!

Published

on

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்பாவு அவர்கள் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணும் முறையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி உள்ளார் அப்பாவு. அவருக்கு அமைச்சர் பதவியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவை பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் அப்பாவு எம்எல்ஏ அவர்களுக்கு சபாநாயகர் பதவியை வழங்க முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சபாநாயகர் பதவியை மிகச் சிறப்பாக நடத்த அப்பாவு அவர்களை தவிர சிறந்த நபர் வேறு யாரும் இல்லை என் திமுக வட்டாரத்திலேயே கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சட்டசபை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version