தமிழ்நாடு

சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அப்பாவு அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று தமிழகத்தின் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில் இன்று எம்எல்ஏக்கள் ஆக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரும் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில் சபாநாயகர் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக அப்பாவு அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டபோது போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் துணை சபாநாயகராக பிச்சாண்டி அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version