டிவி
அப்பத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.. இனி எதிர் நீச்சல் குடும்பத்தில் தினம் தினம் ஒரு தரமான சம்பவம் இருக்கு!
சென்னை: சன் டிவியில் ஓளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் மார்ச் 18ம் தேதிகான புரோமோ வெளியாகியுள்ளது.
எதிர் நீச்சல் சீரியலில் பெண்கள் எப்படி இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கையை தூண்டி ஆயிரம் தடைகள் வந்தாலும் எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும் என சொல்லாமல் சொல்லும் ஒரு கதை தான் எதிர் நீச்சல்.
இதில் வரும் குணசேகரன் கேரக்டர், அப்பத்தா கேரக்டர், ஜனனி, ஆதிரை, சக்தி, ரேணுகா, நந்தினி என பல கதாபாத்திரங்கள் உள்ளன.
இதில் குடும்பத் தலைவராக இருக்கும் குணசேகரன் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களை இழிபடுத்துவதும், அவர்களை கண்ணீர் விட வைப்பதும், நான் அகங்காரமும் இருக்கிற ஒரு பாத்திரமாக இருப்பார்.
ஆனால் இவருக்கு சரியான பதில் கொடுக்கும் அப்பத்தா, அக்குடும்பத்தில் அடிமைகளாக வாழ்ந்து வரும் பெண்களை எப்படியேனும் வெளியே கொண்டு வர வேண்டும் என ஊக்கம் கொடுப்பார். அதோடு பெண்கள் தங்களது சொந்த காலில் உயர்ந்து நிற்க வேண்டும். யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது என நினைப்பவர்.
எனினும் தனது பேத்தியின் திருமணத்திற்கான தன்வசம் உள்ள 40% ஷேரை எழுதிக் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அப்பத்தாவின் 40% பங்கு மூலம் , தங்களுக்கு ஏதேனும் உதவி அப்பத்தா செய்வார் என நம்பியிருந்த நந்தினி, ரேணுகாவால் இதனை தாக்கிக் கொள்ளவே முடியவில்லை. பாட்டியிடம் மனமுடைந்து அழும் காட்சிகள் பலரையும் அழவைக்கும் காட்சிகளாக உள்ளன. அவர்கள் அப்பாதாவும் குண்சேகரனை போல மோசமானவர் என நினைத்து விடுகின்றனர்.
ஆனால் அப்பத்தாவோ இந்த சொத்தினை பகடைகாயாக வைத்து தான் தனது பேத்திக்கு திருமணம் செய்ய நினைக்கிறார். அவரின் அனுபவம் வாய்ந்த அந்த பார்வை, பாவனைகளிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. அப்பத்தா ஏதோ குணசேகரனுக்கு ஏதோ ஒரு ட்விட்ஸ்ட் வைத்திருக்கிறார் என்று. ஆனால் பாவம் எல்லாவற்றையுமே பிரச்சனையாகவே பார்த்த அக்குடும்ப மருமகள்களுக்கு அப்பத்தாவும் அப்படித்தான் என தோன்றிவிட்டது.
தொடர்ந்து பல திருப்பங்களை கண்டு வரும் எதிர் நீச்சல் டீமில் பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது என்ற நிலையில், இன்றைய புரோமோவில் குணசேகரன்-ஐ SKR வீட்டுக்கு சென்று ஆதிரையின் திருமணம் பற்றி பேச கூறுகின்றார் அப்பத்தா. ஆனால் வழக்கம்போல தனது திமிர்தனத்தை காட்டும் கதிர், நாம ஏன் அங்க போகணும் விதாண்டவாதம் செய்கிறார். ஆனால் குணசேகரனோ யாருக்காகப்பா போறோம். கூட பொறந்தவளுக்காகத் தானே போறோம். விடு போய்விட்டு வருவோம் என கூறுகிறார்.
ஆனால் அப்பத்தாவோ கூட பொறந்தவளுக்காக இல்லப்பா? 40% ஷேருக்கான என கூறி சுட்டிக் காட்டுகிறார். அடுத்த சீனில் ஜனனியும், குணசேகரனும் ஒரே காரில் ஆதிரையின் திருமண விஷயத்துக்காக SKR வீட்டுக்கு செல்ல காரில் செல்கின்றனர். அப்போது எல்லோ நேரத்திலும் விவரமா? பேசுவீங்க இப்ப பேசுங்க என ஜனனியை பார்த்து நக்கலாக பேசும் குணசேகரனிடம், பேசும்ன்னு முடிவெடுத்தது நீங்க, நான் என்ன பேசுவது என விலகிக் கொள்வது போல பேசுகிறார். ஏற்கனவே ஜனனியை நம்பி வீட்டுக்கு வந்த SKR குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி அனுப்பிய குணசேகரனால், இன்னும் என்ன ஆகுமோ? என கவலை ஜனனியின் முகத்தில் இருக்கிறது. ஆக இன்றைக்கும் எதிர் நீச்சல் குடும்பத்தில் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு என்றே கூறலாம்..
யாருக்கெல்லாம் எதிர் நீச்சல் சீரியல் ரொம்ப பிடிக்கும்.. மறக்காம உங்களோட கமாண்டுகளாக பதிவிடுங்க..