சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published

on

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனா படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பேசும் போது, இடை இடையே சினிமா கவுண்டர்கள் ஒலிக்கப்பட்டு செம ரகளை செய்திருந்தனர் பிளாக்‌ஷிப் யூடியூப் குழுவினர்.

இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகியும் நாடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன ஒரு வார்த்தை காட்டுத் தீ போல சினிமா துறையில் பரவி, பலரை திக்குமுக்காட செய்தது. இதனால், தான் கூறியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

அப்படி என்ன சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்?

பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. இப்போதெல்லாம் ஓடாத படங்கள் வெற்றி விழா கொண்டாடுகின்றன. ஆனால், இது தான் சரியான வெற்றி விழா கனா சிறந்த வெற்றி அடைந்தது எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியிலேயே ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்தை தான் ஏற்கவில்லை என நடிகர் சத்யராஜ் பல முறை அழுத்தம் திருத்தமாக கூறி பெரிதளவிலான விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் இருக்க தடுக்க நினைத்தார்.

ஆனால், அதையும் தாண்டி யூடியூப்களில் பல படங்களை கலாய்த்து இந்த படத்தை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டார். அந்த படத்தை தான் அவர் குறிப்பிட்டார் என டிரோல் வீடியோக்கள் பரவின.

சீமராஜா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த வெற்றி விழா மற்றும் மாரி 2 படத்திற்கு தனுஷ் வைத்த வெற்றி விழாவை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டார் என பிரச்சனைகள் சூடுபிடிக்கவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்னிப்பு கோரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Trending

Exit mobile version