Connect with us

தமிழ்நாடு

ஜெ. மரணத்தில் அப்பல்லோ எதையோ மறைக்க முயற்சிக்கிறது: விசாரணை ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க முயல்வதாக உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இதற்கு தடைகேட்டும், 21 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது அப்பல்லோ மருத்துவமனை.

அப்பல்லோவின் கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தை அனுகியது அப்பல்லோ மருத்துவமனை. அங்கு ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில்மனு ஒன்றை தாக்கல் செய்தது விசாரணை ஆணையம். அதில், ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான வழக்கை விசாரணை ஆணையம் சரியான முறையிலேயே விசாரித்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட யார் யாரை எல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் அழைத்து நடுநிலையாக விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் அப்பல்லோ நிர்வாகம் மட்டும் தான் விசாரணைக்கு தடை கோருகிறது. அவர்களது கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. மருத்துவர்களை விசாரணைக்கு அனுப்ப அப்பல்லோ தயங்குவதிலிருந்து எதையோ மறைக்க அப்பல்லோ நிர்வாகம் முயற்சி செய்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை அப்பல்லோ மருத்துவமனையின் மீது வைத்து மீண்டும் விசாரணையை தொடர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!