தமிழ்நாடு
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கேட்டு அப்பல்லோ மனு தாக்கல்!
![Arumugasamy - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Arumugasamy.jpg)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது அப்பல்லோ. இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.