இந்தியா
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்: அருண் ஜெட்லி பரபரப்பு தகவல்!
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் அதிரடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானும் சில இடங்களில் அத்துமீறு நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் அலுவலத்தில் கடற்படை தளபதி சுனில் லம்பா உடனும், விமானப்படை தளபதி தனோவா உடனும் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ, எப்படி பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கும் இந்தியா தயார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.