கிரிக்கெட்

“இப்பவே நிறுத்துங்க!”- பிரைவஸியை மதிக்காமல் போட்டோ; கொதித்த அனுஷ்கா ஷர்மா

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா. இருவருக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. மனைவியுடன் இந்த மாதிரி நேரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு, வீட்டோடு இருக்கிறார் கோலி.

அனுஷ்கா, விராட் ஆகிய இருவரும் செலிபிரிட்டி என்பதால், அவர்களுக்கான பிரைவேட் வாழ்க்கை என்பதே இல்லாமல் போனது. கர்ப்பமாவதற்கு முன்னர் வரை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அனுஷ்கா, தற்போது தனக்கும் தன் கணவர் கோலிக்கும் பிரைவஸி தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். இதை மதிக்காமல் தொடர்ந்து அவர்களுக்குத் தெரியாமல் சில ஊடக நிறுவனங்கள் அவர்களை போட்டோ எடுத்து வருகின்றன.

இதனால் கொதிப்படைந்த அனுஷ்கா, ஊடக நிறுவனம் ஒன்று தங்கள் பிரைவஸியைக் குலைக்கும் நோக்கில் எடுத்தப் புகைப்படத்தை, தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‘இந்தப் படத்தை எடுத்த போட்டோகிராஃபர் மற்றும் ஊடகத்தை, எங்கள் பிரைவஸியைக் கெடுக்காதீர்கள் என்று எடுத்து சொல்லிய பிறகும், அந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இது இப்போதே நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்’ என்று கறாராக கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version