விளையாட்டு
’3-ம் ஆண்டு… 3 பேராகக் கொண்டாடுவோம்’ ட்ரெண்ட் ஆகும் விருஷ்கா தம்பதியர்
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியர் இன்று தங்களது 3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
3-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் அனுஷ்கா சர்மா தனது சமுக வலைதளப் பக்கத்தில் தனது திருமணப் புகைப்படத்தைப் பதிவேற்றி, “நம்முடைய 3 ஆண்டுகள்… கூடிய சீக்கிரம் 3 பேர் குடும்பம்” எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
View this post on Instagram
விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி உடன் உள்ளார். இதனால் விராட் கோலி மிகவும் ‘மிஸ்’ செய்வதாகவும் அனுஷ்கா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் விராட் கோலியும், “3 ஆண்டுகள் மற்றும் ஆயுளுக்கும் ஒன்றாக..” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
3 years and onto a lifetime together ❤️ pic.twitter.com/a30gdU87vS
— Virat Kohli (@imVkohli) December 11, 2020
விருஷ்கா தம்பதியர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.