சினிமா செய்திகள்
‘பாலியல் தொல்லைகளைச் சந்திதுள்ளேன்…’- Me Too அனுபவம் பகிர்ந்த அனுஷ்கா
தனது சினிமா வாழ்க்கையில் தானும் பல வித பாலியல் தொல்லைகளைச் சந்தித்துள்ளதாக ‘பாகுபலி’ புகழ் நடிகை அனுஷ்கா தனது Me Too அனுபவம் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி திரைப்படம் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது 2 படங்களைக் கைவசம் வைத்திருக்கும் அனுஷ்கா தனது சினிமா பயணம், காதல்- திருமண வதந்திகள் குறித்து எல்லாம் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா கூறுகயில், “எனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நானும் பல பாலியல் தொல்லைகளைச் சந்தித்துள்ளேன். மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்துள்ளேன். நேர்மறையாக, நேர்மையுடன் எனது எண்ணத்தை வெளிப்படுத்தி வந்ததால் பல பிரச்னைகளில் இருந்து தப்பித்துள்ளேன். எனக்கான மரியாதையை எனது நேர்மையான நடவடிக்கைகள் மூலம் சினிமாவில் சம்பாதித்துள்ளேன்.
காதல்- திருமணம் குறித்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து தொடங்குகிறது என்றே தெரியவில்லை. என்னுடையது காதல் திருமணம் ஆக நடக்காது. எனது திருமணப் பொறுப்பை என் பெற்றோரிடம் கொடுத்துவிட்டேன். நேரம் வரும் போது பெற்றோர் நிச்சயித்த திருமணமாகத் தான் என்னுடையது இருக்கும்” எனப் பேசியுள்ளார்.