சினிமா செய்திகள்

சுந்தர் சி அடுத்த படத்தில் நயன்தாரா பட வில்லன்!

Published

on

சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு நயன்தாரா பட வில்லன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும்நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுந்தர் சி தற்போது ’தலைநகரம் 2’ மற்றும் ’ஒன் டு ஒன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ’ஒன் டு ஒன்’ என்ற திரைப்படத்தை திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ’பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் சுந்தர் சிஜோடியாக ராகினி திவேதி நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ படத்தில் அதிரடி வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,

 

seithichurul

Trending

Exit mobile version