சினிமா செய்திகள்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காரின் காற்றை பிடுங்கிவிட்ட ரசிகர்கள்: ஏன் தெரியுமா?

Published

on

தமிழில் தனுஷுடன் ’கொடி’ மற்றும் அதர்வா முரளியுடன் ‘தள்ளிப்போகாதே’ போன்ற படங்களில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கார் டயரில் உள்ள காற்றை ரசிகர்கள் பிடுங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர் என்பதும் ஒரு சிலர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிபிடத்தக்கது.

ஆனால் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களுடன் செல்பி எடுக்க விரும்பவில்லை என்று அவர் செல்பி எடுக்கவும் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அவரது கார் டயரில் உள்ள காற்றை பிடுங்கிவிட்டு ரகளை செய்தனர் .

விழாவை முடித்துவிட்டு காரில் ஏற வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு கார் டயரில் காற்று இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து ரசிகர்களின் செயல்தான் என்பதை அடுத்து அவரை ஆத்திரமடைந்தார். இதனை அடுத்து அவர் மாற்று காரில் ஏறி வீடு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version