தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவின் 5 பெண் சீடர்களுக்கு முன்ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published

on

சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.,

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் சிலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஐந்து பெண் சீடர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு முன் ஜாமீன் வேண்டும் என்ற மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஐந்து பெண் சீடர்களுக்கும் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிவசங்கர் பாபா வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரணை செய்து வருவதால் மேலும் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version