வணிகம்
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மீண்டும் ஒரு மோசடி!
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆர்பிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் நிறுவனமான பூஷன் ஸ்டீல்ஸ் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து 3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாத ஆர்பிஐயிடம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி புகார் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கில் ரூ.14000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் நிறுவனர் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவரும் லண்டன் மற்றும் ஆண்டிகுவாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிறமாக உள்ளது.