தமிழ்நாடு

இந்த மாதமே மீண்டும் ஒரு புயல்.. தாங்குமா சென்னை?

Published

on

வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்பகுதிகளை நோக்கு நகர்ந்து கரையைக் கடக்கும்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இது வரை 34 செண்ட்டி மீட்டர் பெய்திருக்க வேண்டிய நிலையில், 29 செண்ட்டி மீட்டர் வரை மட்டுமே பெய்துள்ளது.

நவம்பர் மாதக் கணக்கின் படி 5 சதவீதம் வரையில் வட கிழக்கு பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது. நிவர் புயல் காரணமாகச் சென்னையில் பெய்த மழைக்கே வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்து வரும் புயல் சென்னையை நோக்கி வந்தால் என்ன ஆகுமே என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version