தமிழ்நாடு
மீண்டும் ஒரு புதிய புயல்.. அதிர்ச்சி அளித்த வெதர்மேன்!
அதிதீவிர புயலாக மாறிய நிவர் புயல், இன்று காலை கரையைக் கடந்து வலுவிழந்தது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
நிவர் புயல் வந்த பின் சென்னையின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. ஆனால் இன்னும் டெல்டா மாவட்டங்களில் தேவையான அளவிற்கு மழை பெய்யவில்லை.
அடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, தீவிர புயலாக மாறுமா, அது டெல்டா மாவட்டங்கள் பக்கம் கரையைக் கடக்குமா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்,