Connect with us

உலகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்தகட்ட வேலைநீக்கம்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 559 ஊழியர்கள்..!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மிக அதிகமாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இரண்டு அலுவலகங்களில் இருந்து 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வாஷிங்டன் மாநில வேலை வாய்ப்பு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றதை அடுத்து பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு தகுந்த நிவாரண தொகை அனுப்பப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியபோது கடந்த ஜனவரியில் வருவாய் மிகவும் குறைந்துள்ளதும் செலவு கட்டமைப்பு அதிகரித்து உள்ளது என்றும், எனவே வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நிறுவனத்தை சீரமைக்கும் முயற்சியில் இது ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு பணிநீக்கம் இன்னும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 5% பணியாளர்கள் இதுவரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!