தமிழ்நாடு

மோடி ஏன் தாடி வளக்குறாரு தெரியுமா..?- ‘கம்பி கட்டுற கதை’ சொன்ன அண்ணாமலை

Published

on

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தரப்பும், பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து கருத்து சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில் பிரதமர் மோடி எதற்காக தாடி வளர்த்தார் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விசித்திரமான விளக்கம் ஒன்றைக் கொடுத்து உள்ளார்.

அண்ணாமலை கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘கொரோனா காலத்தில் மோடி, தன்னோட வலியைக் காட்டுறதுக்காகத் தான் தாடி வளர்த்தார். மோடியோட தாடிய டிரிம் பண்றத்துக்கு இந்தியாவுல ஆயிரம் பேர் இருக்காங்க. இருந்தாலும் அவர் தன்னோட வேதனைய காட்டுறதுக்கு தாடி வளர்த்திருக்காரு.

எதற்காக… அதன் மூலமா நமக்கு ஒரு மெஸேஜ சொல்றாரு. ஒவ்வொரு இந்தியனும் கொரோனா காலத்தில அனுபவிக்கிற வலியை நானும் அனுபிவிக்கிறேன்னு காட்டுறதுக்குத் தான் அவர் தாடி வளர்த்திருக்காரு’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version