தமிழ்நாடு

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை

Published

on

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காவல்துறை மிக மோசமான காவல் துறைகளில் ஒன்றாக இருக்கிறது என்றும் காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது என்றும் கூறிய அண்ணாமலை சைக்கிளில் செல்லவும், செல்பி எடுப்பதற்மா டிஜிபி என்றும் நேர்மையாக டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் கட்சி பொறுமையாக இருக்கிறது என்றும் ஆனால் பொறுமையும் ஒரு அளவுக்குத்தான் என்றும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பிபின் ராவத் உடலுக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்தாதது தவறில்லை என்றும் ஆளுநர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்று இருந்தார் என்றும் அரசியல் பேச எத்தனையோ இருக்கும்போது ஆளுநரை ஏன் சண்டைக்கு இழுக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் அண்ணாமலை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

Trending

Exit mobile version