தமிழ்நாடு

ராகுல்காந்தியின் கருத்துக்கு நன்றி: அண்ணாமலை பேட்டி!

Published

on

தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சீண்டி எழுப்பி இந்தியாவின் பிரதமராக உட்கார வைத்தது ராகுல் காந்தி தான் என்றும் எந்த காலத்திலும் மோடியால் பிரதமராக முடியாது என்று ராகுல் காந்தி கூறியதை அடுத்தே அவர் பிரதமராக ஆனார் என்றும் அண்ணாமலை கூறினார்

அதேபோல் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று ராகுல் காந்தி கூறினார் என்றும், ஆனால் மீண்டும் மோடி பிரதமர் ஆனார் என்றும் அண்ணாமலை கூறினார்

அதேபோல் ராகுல்காந்தி என்ன கூறினாலும் அதற்கு நேரெதிராக தான் நடக்கும் என்பது அவரது ஜாதகத்தில் உள்ள விதி என்றும் இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்று அறிவித்ததை அடுத்து நிச்சயமாக தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்யும் என்றும் அதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் அண்ணாமலை கேலியுடன் கிண்டலுடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version