தமிழ்நாடு

சாமியார் முன் தரையில் அமர்ந்தால் என்ன தப்பு? கே.என்.நேருக்கு ஆதரவளிக்கும் அண்ணாமலை!

Published

on

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்து இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் அதில் என்ன தப்பு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு சமீபத்தில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்திருக்க கே என் நேரு தரையில் அமர்ந்தபடி இருந்தால் இந்த புகைப்படத்தை திமுகவினரே சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவர்களது கருத்துக்களை கேட்பது தவறு இல்லை என்றும் இதை வைத்து திமுகவில் உள்ள ஒரு சிலர்தான் அரசியல் செய்கின்றனர் என்றும் என்னை பொருத்தவரை பங்காரு அடிகளார் சந்தித்த கே என் நேரு தரையில் அமர்ந்து பேசியதில் எந்தவித தப்பும் இல்லை என்றும் கூறினார்.

 

Trending

Exit mobile version