தமிழ்நாடு
ரூ.200ல் தொடங்கி ரூ.3000ல் முடிந்த பேரம்: பிரஸ் மீட்டில் அண்ணாமலையால் பரபரப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நடத்திய பிரஸ் மீட்டின்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது 200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி அதன் பின்னர் படிப்படியாக உள்ளத்தை 3000 வரை அறிவாலயம் உங்களுக்கு கொடுப்பார்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிரஸ்மீட் என்றாலே பரபரப்பான கேள்விகளும் அதற்கான அதிரடி பதில்களும் வரும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தபோது முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நேற்று பிரஸ் மீட் நடைபெற்றது.
இந்த பிரஸ்மீட் கிட்டதட்ட ஒரு மணி நேரம் நடந்தது என்பதும் காரசாரமான கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை அண்ணாமலை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கச்சத்தீவு குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் உங்களுக்கு அறிவாலயம் கண்டிப்பாக 200 ரூபாய் கொடுக்கும் என்று கூறினார். அதன் பிறகு அவர் அடுத்தடுத்து கேள்வி கேட்டபோது 400 ரூபாய் 600 ரூபாய் என்று ஏற்றிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து 3000 ரூபாய் வந்துவிடும் என்று கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கச்சத்தீவை எங்களுக்கு எப்படி மீட்க வேண்டும் என்பது தெரியும் என்றும் திமுக எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்றும் அண்ணாமலை இந்த பிரஸ்மீட்டில் கூறினார்.
தமிழ்நாடு ரெட்லைட் மீடியாவை களம் 8 ல் நல்ல கும்மு கும்முனு கும்மிவிட்டு இருக்கார் அண்ணன்
திரு K.அண்ணாமலை IPS
அடுத்து யாரு வரீங்க லைன்ல வாங்க (RSB மீடியா C/o தமிழ்நாடு)
200 ,400 ,600 ,1000 ,2000 ,3000 பேட்டா உயர்வு இன்று
இன்ப தேன் வந்து பாயிது காதினிலே???????????????????????? https://t.co/uBBUFlvaap— ????rajesh raja???? & ????Farmer???? राजेश राजा (@anrrajesh7777) May 27, 2022