தமிழ்நாடு
26ஆம் தேதி 12 மணி வரை: விசிகவுக்கு அண்ணாமலை கொடுத்த கெடு!
வரும் 26ம் தேதி 12 மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் தரலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா கூறிய விவகாரம் குறித்து திருமாவளவனுடன் நேரடியாக விவாதிக்க தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு திருமாவளவன் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர் என்றும் அவருடன் விவாதிக்க எங்கள் கட்சியில் சப்-ஜூனியர் ஒருவரை அனுப்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ‘ திருமாவளவன் அவர்களுடைய இடது கை, வலது கை என யார் வேண்டுமானாலும் நம்முடைய அலுவலகத்திற்கு வரலாம் என்றும் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் அவர்கள் கொடுக்கலாம் என்றும் நம்மிடம் உள்ள எந்த புத்தகத்தையும் வாங்கி செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .
மேலும் விவாதத்திற்கான தேதி, நேரத்தை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் அதற்கு நான் எந்த தேதியாக இருந்தாலும் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றக்கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி என்பதை சவால் விட்டுச் சொல்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த சவாலை விடுதலை சிறுத்தை கட்சி ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.