தமிழ்நாடு

6 மணி வரை கெடு, முடிந்தால் தொட்டு பாருங்கள்: அண்ணாமலை

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு 6 மணி வரை கெடு கொடுத்திருப்பதாகவும், அதற்குள் முடிந்தால் தன்னை தொட்டு பார்க்கட்டும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியபோது என்னிடம் 60 கோடி எல்லாம் இல்லை என்றும் ஆடு மாடு மட்டுமே இருக்கிறது என்றும் திமுக அவதூறு வழக்கு தொடுக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை என்றும் தான் ஒரு சாதாரண விவசாயி என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் பாஜக அலுவலகத்தில் நான் 6 மணி வரை இருப்பேன் என்றும் முடிந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் என்றும் திமுக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும் துபாய்க்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற போது எவ்வளவு பணம் கொண்டு சென்றனர் அந்த பணம் என்ன வகை முதன்முதலில் செய்யப்பட்டது உள்பட பல்வேறு ஆதாரங்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் சவாலை ஏற்று 6 மணிக்குள் அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version