Connect with us

தமிழ்நாடு

தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்: அண்ணாமலை ஆவேசம்

Published

on

நீட் தேர்வுக்கு முன்னால் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் என்பதையும் திமுக தலைவர்கள், அமைச்சர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை ஏழை மாணவர்களை அனுமதித்தார்கள் என்றும் தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அண்ணாமலை அவர்கள் சேலம் சென்றார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்து உள்ளது. இது நீட் தேர்வை வைத்து வியாபாரம் செய்வதற்கு எதிராக வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணி கொண்டுவந்தாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த தேர்வு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இப்போது அவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வை அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெறும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதால் தமிழக மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் நீட்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது குறித்து திமுக வெள்ளை அறிக்கை விடுமா? அந்த பத்து வருடங்களில் மொத்தம் 190 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர்ந்துள்ளனர்.

மேலும் திமுக தலைவர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை ஏழை மாணவர்களை அனுமதிக்கிறார்கள் என்பது குறித்து தைரியமிருந்தால் திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுகவினர் செய்யும் அரசியல் தான் மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. யாரெல்லாம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்களோ அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது தனுஷ் மரணத்திற்கு நாம் கொடுக்கும் நீதியாக இருக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் பணம் கொடுக்காமல் அரசியல்வாதிகளின் உதவி இல்லாமல் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டுமானால் அது நீட் தேர்வால் மட்டுமே முடியும். எனவே திமுகவினர் தலைகீழாக நின்றாலும் நீட் தேர்வை நிறுத்த முடியாது. இது நன்றாக தெரிந்தும் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது’ என்று அண்ணாமலை தெரிவித்தார்

ஆன்மீகம்38 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்49 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா11 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!