தமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!
சென்ற வாரம் தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களைக் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது.
கஜா புயலினால் வீடு, தொழில், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் சென்ற வாரம் முதலே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.