தமிழ்நாடு
ரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
![Chennai HC and Anna University - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/Chennai-HC-and-Anna-University.jpg)
ரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இருந்தாலும் அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அண்ணா பலகலைக்கழகம் அறிவித்து இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், தேர்வுக்காக முன்கூட்டியே அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு இருந்தது. அதனால் 126.10 ரூபாய் வரை செலவாகியுள்ளது தெரிவித்தது.
மேலும் இந்த செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பு பட்டியலையும் அணைத்து மாணவர்களுக்கு வழங்கவும் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. எனவே மாணவர்கள் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணத்தைத் திருப்பி வழங்கவும் முடியாது. அது தவறான உதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்தது.
விசாரணையின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணம் உத்தரவு செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.