தமிழ்நாடு
தமிழக அரசால் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளுக்கு அட்டவணை: அண்ணா பல்கலை அதிரடி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ரத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரியர் தேர்வு ரத்து செல்லாது என்றும் கூறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளது.
பிப்ரவரி 16 முதல் 28 வரை அரியர் தேர்வு நடைபெறும் என்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசால் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது