டிவி
இறந்த தந்தை நினைவாக ‘டாடி டாடி’ என உருகிய அனிதா சம்பத்
![Anitha Sampath with her parents - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Anitha-Sampath-with-her-parents.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்த அனிதாவுக்கு சினிமாவில் நடிப்பதுதான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, தான் பார்த்து வந்த செய்தி வாசிப்பாளர் பணியையும் தூக்கியெறிந்துவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதன் மூலம் அனிதா, பல ரசிகர்களைப் பெற்றார். இருப்பினும் அவர் சென்ற வாரம் நாமினேட் செய்யப்பட்டு எவிக்ட் ஆனார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அனிதாவின் தந்தை காலமானார்.
தற்போது தன் தந்தை குறித்து உருகியுள்ள அனிதா, ‘அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்.. பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது. அப்பானா எனக்கு உயிரு. எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன். எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன். உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன். நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப. Sorry daddy. என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது. எங்க போன ராசா’ என்று இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டு தன் தந்தையுட் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram