சினிமா செய்திகள்
இந்த வாரம் அனிதா எலிமினேஷன்: கால்குலேஷன் எப்படி தப்பாகியது?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பிறகு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அனிதா எலிமினேட் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா, ஆரம்பம் முதலே கால்குலேஷன் உடன் விளையாடி வந்தார் என்பதும், எந்தெந்த சீசனில் யார் என்ன தவறு செய்தார்கள்? இந்த சீசனில் யார் என்னென்ன விதமாக புத்திசாலித்தனமாக விளையாடினார்கள் விரல் நுனியில் வைத்து இருந்து அதற்கேற்றபடி விளையாடினார்.
ஆனால் சில இடங்களில் அவரது கால்குலேஷன் தவறியது. குறிப்பாக அவர் தேவையில்லாமல் பாலாவுடன் மோதியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் அவர் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசியதும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இதனை அடுத்து இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் அனிதாதான் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று உள்ளதாகவும், இதனை அடுத்து அவர் வெளியேறி விட்டதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.