டிவி
தனிமையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. கதறி அழும் அனிதா சம்பத்!
பிக்பாஸ் சீசன் 4 தொடங்கிய ஒரு சில நாட்களில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் பெரும் சண்டை ஏற்பட்டது விரிசலானது.
பின்னர் இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தி வைத்தார் கமல் ஹாசன். அதன் பிறகு பெரிதாகச் சண்டை போன்றவற்றிலிருந்து அனிதா சம்பத் ஒதுங்கியும் இருந்து வந்தார்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாகவும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட அதிருப்தியோ, என்னவோ, இன்றைய ப்ரோமோவில், “கொஞ்சம் தமியாக இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. நான் பொதுவாக வேடிக்கையான பெண். பிரச்சினைகள் வந்தாலும், யாரும் என் பக்கம் நிற்காதது போல ஒரு கஷ்டம் ஏற்பட்டுள்ளது, புடிச்சவக சொல்கிறதை எடுத்துக்கொள்வதா, நான் நினைத்ததை எடுத்துக்கொள்வதா என்பதற்கு நடுவில் ஒரு போராட்டம் வருகிறது மனதளவில், ஒரு நெகட்டிவ் உள்ளுணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. என் கிட்டத்தான் தவறுகள் உள்ளது போல ஒரு குழப்பம் என்று கூறிவிட்டு” அனிதா சம்பத் ஓவென கன்ஃபசன் அறையில் கதறி அழுகிறார்.
இதை பார்க்கும் பலருக்கும், அனிதா மீது இறக்கம் ஏற்படுவது போல ப்ரோமோ அமைந்துள்ளது.