இந்தியா
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன? அமைச்சரின் ஆணவப்பேச்சு!
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது எனவும் சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் அம்மாநில பெண் அமைச்சர் இமார்த்தி தேவி. இவர் கூறிய கருத்துக்கள் அங்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் இமார்த்தி தேவி தனது பேட்டியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? சமைத்த பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதொன்றும் தவறு கிடையாது.
கழிவறை அருகில் சமயலறை இருப்பதில் தவறு இல்லை. வீட்டிற்குள்ளேயே குளியலறையுடன் கழிவறையும்தான் இருக்கிறது. அதற்காக சாப்பிட மறுக்கிறார்களா என்ன? என மேலும் சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றியுள்ளார்.