Connect with us

இந்தியா

11 வருடங்களாக மனைவியை பூட்டி வைத்த வழக்கறிஞர்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published

on

11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார்

ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர் தொழில் செய்யும் மதுசூதனன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகள் மட்டும் பெங்களூரில் இருந்த இந்த தம்பதிகள், அதன்பின் மதுசூதனனின் தந்தை வீடு இருக்கும் விஜயநகரத்துக்கு குடி பெயர்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுப்ரியாவை அவரது கணவர் மதுசூதனன் மற்றும் அவரது பெற்றோர் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்ததாகவும் சுப்ரியாவின் பெற்றோர்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சுப்ரியாவுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த போதிலும் தங்களது பேரக்குழந்தைகளை கூட தனது மருமகன் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது மகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் கொள்வதாகவும் அவர் சித்தரவதை செய்யப்படுவதாகவும் சுப்ரியாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுசூதனன் வீட்டை சோதனை செய்யுமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து போலீசார் மதுசூதனன் வீட்டை சோதனை செய்தபோது 11 ஆண்டுகள் சுப்ரியா வீட்டில் ஒரே அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் இந்த 11 ஆண்டுகளில் ஒரு சில முறை மட்டுமே மாமியார் உடன் வெளியே சென்றதாகவும் பெரும்பாலான நாட்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இரண்டு பேரக் குழந்தைகளை கூட அம்மாவை சந்திக்க விடுவதில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்களையும் சந்திக்க விடவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது

இதனை அடுத்து சுப்ரியாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவரின் கணவர் அல்லது உறவினர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்), 343 (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான சிறைவைப்பு), 346 (ரகசியமாக சிறையில் வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரியாவின் தாயார் ஹேமலதா கூறுகையில், தனது மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதால் மகள் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?