இந்தியா
மாவோயிஸ்டுகள் தாக்குதல்.. ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்.
அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ சிவசேரி சோமாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாதுகாவலருடன் சேர்த்து மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.சுட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.