இந்தியா
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில்: பாஜக பிரபலம் வாக்குறுதி!
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்பனை செய்யப்படும் என ஆந்திர மாநில பாஜக பிரபலம் ஒருவர் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலங்களில் பாஜக பெருவாரியான மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருந்தாலும் தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் கட்சியை வளர்க்கவும் ஆட்சியை பிடிக்கவும் திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீருவது என பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பாஜக ஆந்திர மாநில தலைவர் சோமு வீரராஅஜு என்பவர் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய போது, ‘பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது வழங்கப்படும் என பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஆந்திராவில் 200 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்கப்பட்டு வரும் நிலையில் அது தரமற்று உள்ளதாகவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வகை 50 ரூபாய்க்கு தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து குடிமகன்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ஆந்திராவில் எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கும் போது மதுபான விலையை மட்டும் குறிவைத்து பாஜக களத்தில் இறங்கி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.